Friday 8 June 2012

நட்பின் மடியினிலே…

அழகாய்ப்பூத்த
இனிய நட்பின்
மடியினிலே…                                                           
காலமெலாம்
உறங்கும்
அழியா வரந்தர 
வேண்டுமென
நாள்தோறும்
வேண்டினேன்
இறைவனிடம்…
 

துவண்டு மனம்
சரியும் தருணம்
தாங்கி நிற்கும்
பூமித்தாயாகவும்...
என் சிறுவளர்ச்சியின்
பூரிப்பிலும்...

அன்பின்
அரவணைப்பிலும்...


பெற்றவளுக்கு
நிகராய் மாறும் …
உன் நேசத்தின்முன்
ஈடொன்றுமில்லை 

என்னுயிர் நட்பே…
என் வாழ்வின்
உன்னதம் நீயே …
நீ மட்டுமே….

------கீர்த்தனா--------

No comments:

Post a Comment