Thursday 14 June 2012

என்னுயிர் கொண்டு சென்றுவிடு....

கடிவாளம்
இல்லாதமனம்
இழுத்து வைக்க
முடியவில்லை
என்னால்...
 
உன் நினைவுகள்
என் மனதை
ஆளும்போது
ஒரு கணம்
சிலிர்ப்பாய்...
மறுகணம்
தவிப்பாய்...

நீ என்னோடு
பேசிக்கொண்டே
இருக்கவேண்டும்
என்று சுயநலமாய்
பேசவில்லை
என்றால்
கோபமாய்...
இப்படியே
உணர்ச்சிக்
குழம்புகளின்
கலவையாய் 
நான்...

என்னுள் வந்த
பரவசமா நீ
இல்லை என்
உயிர் மெழுகை
உருக வைக்க
வந்த தீக்குச்சியா நீ

என்னுள் உன்னைத்
தேடுகிறேன்
காணவில்லை...
வந்து விடு...
என்னுயிர் கொண்டு
சென்றுவிடு....

 -----கீர்த்தனா​----

1 comment:

  1. அழகு அழகோ அழகு..கீர்த்தனா..இப்படியும் இருப்பதுவும் ஒருவகையான வம்பான அன்புதான். உனக்குள் அவன் நினைவு வந்துவிட்டால் எத்தனை யானை சேர்ந்தாலும் அத்தனையும் உனக்கு முன்னாள் ஒரு பூனைதானே... அத்தனை பலமுண்டு நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பிற்கு... அம்பில் இல்லா கூர்மை என் உள்ளன்பன்பிற்கு உண்டு..

    இப்படி உன் மேல் பைத்தியமாய் இருக்கும் என்னை வந்து சேர்ந்துவிடு..இல்லையென்றால் எனை கொண்டு சென்றுவிடு.. அதுவும் உன்விருப்பதிற்கே விட்டு விடுகிறேன்.. உன்மேல் கோபம் கூட வராதே எனக்கு ஏன் என்கிறாயா அதை காரணமாய் வைத்து பிரிந்து சென்றுவிட்டால் எனக்கல்லவோ பாதிப்பு.. அருமையாக சொன்ன கீர்த்தனா உங்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்... வளர்க உங்களது மேலான அன்பு...

    ReplyDelete