Friday 14 June 2013

வறண்ட நிலம்!

மண் பிளந்து
அகல வாய் திறந்து
வான் துளி பருக
அண்ணாந்து பார்த்தபடி
வறண்ட நிலம்!

"மண்ணே நீ மண்ணாய்ப் போ"
என அலட்சியமாய்
உல்லாசப் பயணத்தில்
மழை மேகம்!

வயிறு சுருண்டு
தாகம் கொண்டு
நா வறளும் போதினிலும்
வியர்வைத்துளி நீர் பாய்ச்ச
துடித்தபடி விவசாயி!

----கீர்த்தனா----

2 comments: