Friday 6 June 2014

அநீதி...

கறந்த பாலை அருந்துகையில்
கருத்தினிலே ஒரு நெருடல் 
தட்டிப் பறித்துண்ணும் காக்கையினம் 
ஏனோ நினைவினிலே...

குட்டிக் கன்றின் பசியுணர்வும் 
ஒட்டிப் போன அரை வயிறும் 
சுட்டிக் காட்டின அநீதியென... 
உள்ளே இடித்தது மனச்சாட்சி 
பாலின் சுவையில் கசப்புணர்வு!

கல்சியம் குறைந்து விட்டதாம் 
மருத்துவரை சாக்கு சொல்லி 
அருந்துகிறேன் தொடர்ந்தும்...
சாதாரண மனிதகுணம் வழமை போலவே...
:(
---கீர்த்தனா---