Saturday 24 October 2015

விதி

 









நிர்மலம் குலைந்த
சிந்தனை வானில்
கரும்பூத முகில்களின்
கொடுங்கோலாட்சி!

வீதிதோறும் அரசமரங்கள்!
போதிமரமாகும் பேறு
அவற்றுக்கும் இல்லை!

விதி அறிந்து
நிர்வாணம் பெறும் பேறு
சபிக்கப்பட்டவர்களுக்கும் இல்லை