Wednesday 22 August 2012

மௌனத்தின் பரிபாஷை


அன்பின் உயிரே….
உன்னினிய வாழ்வே
எம்பெரும் கனவு…
பிரிவின் சுமையில் கலங்காதே…
நட்புகள் நாம் என்றும் உன்
இதயக் கூட்டுக்குள்...
சிம்மாசனம் போட்டமர்வோம்…
வெளியேற மாட்டோம்…!

மௌன மொழியின்
அர்த்தங்களின் வலிமை…
வாய் வார்த்தையை விட
அழுத்தமானது…
அன்பானது.. இனிமையானது…!

மௌன மொழியின்
ஒவ்வொரு அன்பின்
துளிகளையும்….
உன்னிதயம் உணரும்
எமக்காய் உருகும்…!
அவ்வண்ணமே உன்
மௌனத்தின் பரிபாஷை
நாமும் உணர்வோம்…
உருகிக் கரைவோம்…!

என்றோ ஒரு நாள்…
ஒன்றாய் நனைவோம்
அன்பு மழைச்சாரலில்...
அந்நாளுக்காய்…
ஒவ்வொரு கணமும்
எண்ணியபடியே...
உயிரே உனக்காக...!

------கீர்த்தனா------