கள்ளமில்லா
வெள்ளை
அன்னங்களின்
முத்தமிடலில்…
வரையப்பட்ட
இதயமது…
நீரினிலும்
பளிங்காய்
பிரதிபலிக்க…
இயற்கையன்னை
வரைந்து வைத்த...
இரட்டை இதயங்களின்
அற்புத அழகினை
அள்ளிப்பருகி…
ஒளிச்சிரிப்பினை
வீசியபடியே…
லயித்து நின்றான்
கதிரவனும்…
தன்னிலை மறந்து
சொக்கிப் போய்...
----கீர்த்தனா----Vis flere