Friday 8 June 2012

மோகம்...

மலர்களில்
மோகம் கொண்ட
வண்டு…

மரங்களில்
மோகம் கொண்ட
காற்று…

நிலவினில்
மோகம் கொண்ட
வானம்…

நிலமதில்
மோகம் கொண்ட
மழைத்துளி…

புல்லின் நுனியில்
மோகம் கொண்ட
பனித்துளி…

இரவினில்
மோகம் கொண்ட
கருமை…

இகமதில்
மோகம் கொண்ட
கதிரவன்…

காதலில்
மோகம் கொண்ட
இதயம்…

இப்படியே
மோகத்தினால்
உயிர்பெறும்
இவ்வுலகவாழ்க்கை …

--------கீர்த்தனா-----------

No comments:

Post a Comment