Tuesday 5 June 2012

தொலைந்ததும் கிடைத்ததும்...

ஊண்
மறந்தேன்...
உறக்கம்
தொலைத்தேன்...
உறவுகள்
தொடர்பிழந்தேன்...

இயற்கையை
துறந்தேன்...
இசையினை
மறந்தேன்...
வாசிப்பை
இழந்தேன்…

கணணிக்குளடங்கிய
உலகவுருண்டையை
கைகளில்…
உருட்டியபடியே
முகந்தெரியா
உறவுகளுடன்…
முகப்புத்தகத்தில்
ஐக்கியமானேன்
அனைத்தயுமிழந்து…

---கீர்த்தனா---

No comments:

Post a Comment