Friday 8 June 2012

அன்னையர்தினம்..

பெற்றவளின்
பேரன்புக்கு
நாம் காட்டும்
நன்றிகடன்
வருடத்தில்
ஒருநாளில்
வாழ்த்துக்கள்
கூறுவதில்
அடக்கிவிட
முடியாதே…

உயிர்தந்த
நிமிடமுதல்
அன்னையவள்
மூச்சிறுதிவரை...
பூலோக
தெய்வத்தை
பூப்போலக்
காப்பதுதான்
நமக்கிங்கு
முதற்கடமை…
உறுதிகொள்வோம்
இன்று...
முதியோர்
ல்லங்கள் இனி
வேண்டாமென்று….

------- கீர்த்தனா-------

No comments:

Post a Comment