Thursday 7 June 2012

இதயங்களின் காயங்கள்

காதல் சொல்லி
மனங்களுட்புகுந்தோரே
மலர்களாயன்பை 
அள்ளி வழங்காமல்...
முட்களாய் 
வலியையேன் 
வாரிவழங்குகிறீர்கள்

வலிகள் வழங்கும்
வள்ளல்களே
அதன் குணம் 
எப்படியென்பதை
நீங்கள்  இன்னும்
அறியாததினால் தான்...
தெரியாமல் 
வாரிக்கொடுத்தீர்களோ...
 
முட்கள்  குத்தி
கிழிக்கும்  வலியை......
எங்கள்  இதயங்கள் 
மட்டுமனுபவிக்கட்டும்
நாம்  உயிராய் 
நேசித்த  இதயங்களுக்கு...
வேண்டாமிந்த ரணங்கள்
எம்முள்  பூத்த 
அன்பு மலர்கள்...
மட்டுமேயுங்களுக்கு 
சமர்ப்பணம்



No comments:

Post a Comment