Friday 8 June 2012

பனித்துளிகள்

புற்களின்
நுனியில்
மின்னும்
வைரங்களாய்ப்
பனித்துளிகள்...

ரோஜாப்பூ
இதழ்களிலும்
முத்துக்களாய்ப்
பனித்துளிகள்...

இவற்றினழகில்
தனைமறந்து
பட்டொளி
வீசிய கதிரவன்
வித்தையால்...
ஒவ்வொரு
பனித்துளியும்
வானவில்
வண்ணத்தில்...

 
வைரங்களையும்
முத்துக்களையும்
எடுத்துக்கோர்க்க
வேண்டும் போல்
கைகளில் ஓர்
துறு துறுப்பு...

இத்தனை
அழகையும்
இரசிக்க
இருகண்கள்
போதவில்லை
எனக்கு...


-------கீர்த்தனா--------



3 comments:

  1. இயற்கை அண்ணையின் விளையாட்டே தனி அலாதி தான்!
    அதிலும் உங்கள் தமிழுடன் வாசிக்கையில் அந்த முத்துக்களையும் வைரங்களையும் அள்ளி முத்தமிடலாம் போலுள்ளது !!

    ReplyDelete
  2. மிகவும் சந்தோசம் பிரபு...தொடர்ந்து பின்னூட்டம் இட்டு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.. :))

    ReplyDelete
  3. பின்னூட்டத்துக்கு நன்றிகள் தம்பி... :)

    ReplyDelete