Friday 8 June 2012

முள்ளிவாய்க்கால்

ஈனர்களின்
இரத்தப்பசிக்கு
எமதன்பு உறவுகள்
இன்னுயிர்
தனையிழந்து
புதையுண்ட நாள்....

இரக்கம் இல்லாமலே
பிஞ்சு முதல்
முதியோர் வரை
வேரறுக்கப்பட்ட நாள்....

நெஞ்சமெல்லாம் பதறி
தொலைக்காட்சி முன்னே
நாம் உயிருறைந்து
வெம்பி நின்ற நாள்...

புலம்பெயர் மக்கள்
நாம் கையாலாகா
நிலை எண்ணி
புழுவாய்த் துடித்து
இரத்தக்கண்ணீர்
வடித்த நாள்...

மாறுமோ இந்தக்காயம்
எம்முயிர் உடல் விட்டு
அகலும் வரையில்…

உயிர் நீத்த எம்
உறவுகளுக்காய்
செந்நீர் கலந்த
கண்ணீர் அஞ்சலிகள்

-------கீர்த்தனா-------

No comments:

Post a Comment