Monday 11 June 2012

அருவமாகி விடுவேனோ…

இறுமாந்திருந்தேன்
தவறே  
செய்யாதவள்
நானென்று
பெருமையுடன்
இருந்தேன் ...
அன்பை
வழங்கும்
அரசி என்று

திமிராக
இருந்தேன்
தவறுகளைத்
தட்டிக்கேட்கும்
பாரதி கண்ட
புதுமைப்பெண்
நானென்று…
எங்கிருந்தோ
வந்தாய்...
அன்புக்கவி
சொல்லி
எனையசைத்த
அந்த சில
நொடியில்...
உனக்குள்ளே
காணாமற்
போனேன்
தனித்தன்மை
தொலைத்து...
மீண்டு வர
முடியாமல்...
உன்னன்புக்
கடலில்
மூழ்கிக்
கரைந்து
அருவமாகி
விடுவேனோ

------கீர்த்தனா-----

2 comments:

  1. அண்பை யாரால் தான் வெல்ல முடியும் அக்கா. அண்பை அண்பாலே தான் வெல்ல முடியும். உங்கள் அண்பிற்கு நாங்கள் என்றுமே அடிமை..

    ReplyDelete
  2. miga magizhchchi thambaa naanum unkal ellarathu anpukkum endrum adimai... :)

    ReplyDelete