Friday 8 June 2012

ஏக்கத்துடனே…

அன்றொருநாள்
உன்னால்…
என்னகத்தில்
வீழ்த்தப்பட்ட
அன்புச்சிறுவிதை…

வேரூன்றிச்
செடியாகி
மரமாகிப்பெரு
விருட்சமாகி
உள்ளமெலாம்
வியாபித்து
நிற்கும்வேளையிலே..

மெதுவாக நீ பிரிந்த
காரணம் புரியாமலே…
நானலைந்தேன்
பைத்தியமாய்…
என்றோ ஓர்நாள்
வருவாயெனும்
ஏக்கத்துடனே…

----------கீர்த்தனா----------

4 comments:

  1. அழகான வரிகள் அக்கா.

    ReplyDelete
  2. மிகவும் நன்றிகள் தம்பி...தொடர்ந்து பின்னூட்டம் இட்டு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.. :))

    ReplyDelete
  3. பிரிவு என்பது ஒவ்வொரு மனமும் எதிர்கொள்வது, அது முடுவு என்றாலும் மீண்டும் வரும் என்று ஒரு ஏக்கம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள், அக்கா !

    ReplyDelete
  4. ஆமாம்... உண்மை அன்பு மரணிக்காது என்ற நம்பிக்கை...பின்னூட்டம் இட்டது மகழ்ச்சி தம்பி.. :)

    ReplyDelete