Wednesday 27 June 2012

மீண்டு வரமுடியாமலே...

எண்ணங்களின்
வெறுமைகளால்                                                
ஒரே வெற்றிடம்…

வெற்று வெள்ளைத்
தாளாய்...எதுவுமே
தோன்றாமல்
மனப்பறவை
சிறகொடிந்தே...

உணர்வுவலைப்
பின்னல்களால்…
எழும் குழப்பங்களின்
கலவைகளால்...
பிரிக்க முடியா
வலிமையுடன்
இறுகிய சிக்கல்கள்...

பற்றிக்கொள்ளத் 
தூணுமின்றி…
இனம் புரியா
ஒரு தவிப்பு…
மீண்டு வர
முடியாமலே...

----கீர்த்தனா----

2 comments:

  1. உன் உறங்காத உள்ளத்தில்!..
    உணர்வலைகள் உள்ளவரை!..
    உன் வெள்ளைத் தாளில் எல்லாம்..
    வெள்ளி மலர் பூக்குமடி!.

    உன் உள்ளிருந்து வருகின்ற..
    உருக்கமான வரிகள் எல்லாம்!..
    பொன் நிலவாய் ஜொலிக்குமடி1..
    பூமகளே!..

    இன்று நீ!..
    போவென்று சொன்னாலும்
    உனை விட்டுப் போகாது!..
    உனக்குள்ளே ஊறி..
    உன் உணர்வலையில் கொப்பளித்து!..
    எம்மை!..
    கனவுலகில் மிதக்க வைக்கும்
    உன் திறமைகள்!.
    உன் கற்பனைகள்!.
    உன் கவிதைகள்!..

    நெஞ்சைத் தொடும் உருக்கமான உங்கள் இனிய கவிதைக்கு இந்த அண்ணாவின் பதில் இது!.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..
    அன்புடன் நான் அண்ணன்..

    ReplyDelete
  2. ARUMAI ARUMYAANA KAVITHAI ANNAA...AZHAGAANA PINNOODDATHTHUKKU NANDRIKAL ANNAA.. :)

    ReplyDelete