Friday 8 June 2012

முதிர்கன்னி..

சிரித்தது அழகாய்
வானத்து நிலவு
எனைப் பார்த்தே,
ஏய் நிலவே..!!
என்ன சிரிப்பு …
என்றே கேட்டேன்

நானழகு என்றது
அதனாலென்ன …
இருந்துவிட்டுப்போ
என்றேன் ……
உனைவிடஎனையே
இரசிக்கிறார்களென்றது…

நிலாமகளும்
எள்ளி நகை யாடும்
நிலையில் நான் ….
திருமணச்சந்தையில்
நிறங்காட்டி …
நிராகரிக்கப்பட்ட
கறுப்புமங்கை நான்…

காத்திருக்கின்றேன்
அகத்தழகை மதிக்கும்
துணைக்காயேங்கியே
முதிர்கன்னியாய் ….

---------கீர்த்தனா---------

No comments:

Post a Comment