
இகமதைப் படைத்து…
ஏன் பறித்தாய்
சிலரிடம் மட்டும்…
அதை இரசிக்கும்
உரிமையை...
பாரபட்சம்
காட்டும் குணம்
மனிதனிடம் வரலாம்...
உன்னிடம் வரலாமா...
வண்ணங்களின்
அழகறியாமல்...
வாழும் அவலத்தை
நீயும் வாழ்ந்து பார்
வலி புரியும் உனக்கும்…
கண்மூடி அரைநாள்
நான் வாழ்ந்து
பார்த்தேன்
கடுங்கோபம் உன்மேல்
ரௌதிரக்காரியாய்...
----கீர்த்தனா----
No comments:
Post a Comment