Thursday 21 June 2012

பகுத்தறிவு எங்கே??

அருவமான
இறைவனுக்கு
பாலாபிஷேகம்…                                       
உருவமுள்ள
குழந்தைக்கு
பசியபிஷேகம்…

மூடநம்பிக்கையில்
மூழ்கிச்சிந்திக்க
மறுக்கும்
பிடிவாத மனிதர்...

சிந்திக்கும் போது
இனந்தெரியாக்கோபம்
பகுத்தறிவு எங்கே
தொலைந்தது…


----கீர்த்தனா----

2 comments:

  1. பசியால் வாடும் பிஞ்சு மலர்களை அள்ளி அணைத்து. ஆறுதல் சொல்கிறது உங்கள் கவிதையின் வரிகள் இங்கே!.. எங்கோ தொலை தூரத்தில் தொலைந்து போன அந்த‌ பகுத்தறிவை மீண்டும் தறித்தெடுத்து வந்து மனித நெஞ்சங்களில் மீண்டும் நிலைநாட்ட முயற்சிக்கிறது அது!.. வாழ்த்துகள்!...

    ReplyDelete