Friday 8 June 2012

ஈழமகன்

போராடிய
நெஞ்சமொன்று
சிறையினிலே
தஞ்சமின்று…

தன்னுயிர்ப்பிஞ்சு
மழலைகளின்
பிரிவினிலே
ஏக்கம் கொண்டு…

தண்டனையளித்து
வெளியேற்றென்று
உண்ணாநோன்பிருந்தே
போராடுகின்றது…

போராட்டமே
வாழ்க்கையெனின்
போராடித்தானாகவேண்டும்
உன்விதி, என்விதி
எல்லாம் நம் தலைவிதி
கலங்காதேயென்னுயிரே 
காலம் பதில் சொல்லும்..

---கீர்த்தனா---

No comments:

Post a Comment