Friday 8 June 2012

அன்னையவள் ஏங்குகின்றாள்…

எமைத்தாங்கும்
அன்னையவள்
ஏங்குகின்றாள்…
பசும்போர்வை
வேண்டுமென...

அவளாசை
தீர்த்து வைப்போம்
பிள்ளைகளாம்
நாங்களிங்கு

ஆளுக்குப்
பத்துமரம்
ஆனந்தமாய்
நாட்டிடுவோம்

பசுமைப்புரட்சி
செய்தே
பூமகளாம்
நம் தாய்க்கு
பூவாடை
போர்த்திடுவோம்...

-------கீர்த்தனா-------

No comments:

Post a Comment