Sunday 25 February 2018

அழிந்த சுவடுகள்


அழகியல் வண்ணங்களையும் 
ஆனந்தப் பறத்தல்களையும் 
உணர்கொம்பின் உணர்வுகளையும்
அன்றையதாக்கி விட்டு
நான்கு சட்டங்களுக்குள்
அடங்கிச் சுவரில் தொங்கியது
பாடம் செய்யப்பட்ட
பட்டாம்பூச்சி ஒன்று !!!!

கீர்த்தனா

No comments:

Post a Comment