Thursday 30 May 2013

முகில் விடு தூது

வெட்டிய மின்னலில்
தங்க மழைத்துளி!!
கொட்டிய அருவியைக்
கவிழ்த்தது வானம்!!

இடித்த இடியின்
அதிர்வினில் மீண்டு...
விடுத்தது நெஞ்சம்
நனைந்திடும் அழைப்பினை...

ஜலதரங்கம் வாசிக்க
நொடியினில் கற்றது...
மழைக் குளித்த
வீட்டுத் தாழ்வாரம்!!

சாரல் தூவும்
முகில் விடு தூதில்
மூழ்கி நனைந்தது
புவி இதமாக....

---கீர்த்தனா---

2 comments:

  1. அழகான இதமான கவிதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete