Friday 17 May 2013

புல்லாங்குழல் இசையில்....

கனாக் கண்டேன் நேற்று

பிருந்தாவனக் கண்ணன்
காற்றில் மிதந்து வந்தான்!!
ஒற்றை விரல் பிடித்து
பூங்காட்டுச் சோலைக்குள்
கூட்டிச் சென்றான்!!

வண்ணமலர்கள் வாசம்!!
வண்டினங்கள் ரீங்காரம்!!
வண்ணப் புள்ளின கானம்!!
எண்ணங்கள் சிறப்பிக்க...

புல்வெளியில் இருக்கை தந்து
புல்லாங்குழலை இடைச்சிறை விடுவித்து
புல்லரிக்கப் புதுராகம் இசைத்தான்...

பவழவாய் உதடு குவித்து
நீள்விரல்கள் குழற்துளைகளில் நடனமாட
செந்தாமரை விழியசைத்து
நோகாதே என் தாயே
எனதன்பில் உன் துன்பம் கரை என்றுணர்த்தி
மென்மையாய்ப் புன்னகைத்தான்!!

---கீர்த்தனா---

1 comment: