Friday 3 May 2013

மாயன் வரவிற்காய்...


செங்காந்தள் நீள் விழியாள்
சுழற்றும் பார்வைக்குள்
காதற் கோலம் கண்டதென்ன?
கோலக் காட்சிக்குள்ளே
மிதந்த பிம்பம் தான் என்ன?

கண்ணுக்குள் நிலவாக
பத்திரமாய் அவன் பிம்பம்
பதித்து வைத்துக் காதலுடன்
கொடி பற்றிப் படர்ந்த படி!

இடை பொய்த்த பாவையவள்
நடை மெலிந்து ஏக்கத்துடன்...
தடை தாண்டும் காதலுடன்...
விழி வாசல் விரித்து வைத்து
மாயன் அவன் வரவிற்காய்...

---கீர்த்தனா---

2 comments:

  1. ரசிக்க வைத்தது வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete