Saturday 25 May 2013

இன்னிசையின் ராஜன்...

அசைய வைத்தான் புவியை
இசை தந்து நாதக்குரலோன்!!!

மரணம் வென்ற மணிக்குரலில்
புவனம் மறையும் காலம் வரை
உலவும் தென்றல் காற்றினிலே
உந்தன் மூச்சுக் கலந்திருக்கும்!!!

எமனும் ஒரு கணம் கலங்கிப் பின்
தலை தாழ்த்தி வணங்கினனோ??
இசைக் குரல்வளையை நசிக்க முன்பு
மனம் குன்றி இழையும் குரல்
கொன்ற பாவியாவேன் என்று...

சௌந்தரத்தின் ராஜன்
இன்னிசையின் மகாராஜன்...
எத்தனை உயிர் உருக வைத்தாய்
குழைந்து வந்த குரலினிலே....
அத்தனை உள்ளமும் கலங்கி
ஒரு கணம் ஆன்ம சாந்திக்காய்....

---கீர்த்தனா---

1 comment:

  1. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete