Wednesday 29 May 2013

காகிதப்பூ

காய்க்காத பூவுக்குள்
கனமான பாரம்!!
கனவு சுமந்த கண்களுக்குள்
கலங்கலாய் ஈரம்!!

பூக்க வைத்தவனோ
காய்க்க வைக்க ஏன் மறுத்தான்?
வேண்டாத வறுமைக்குள்
ஒரு மரத்தில் பல காய்கள்!!
வேண்டி வருந்தும் கருவறைக்குள்
ஊர்தல் இல்லா வெறும் வெறுமை!!

எதனால் எனும் கேள்வியுடன்
விளைச்சல் இல்லா வறண்ட நிலமாய்...
உளைச்சல் கொண்ட மனத்துடன்
செவி சாய்க்கா இறைவனைத் தேடி...
கோவில் விருட்சங்களை
சுற்றி வலம் வந்த படி.....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment