Friday 10 May 2013

அன்னை மடியில் கீர்த்தனா...

தடவித் தடவி
அசைவினை உணர்ந்து!
ஊட்டி ஊட்டி
தொப்புள்கொடி வழி
அமுதளித்து...

கொடியறுத்து மடியினில்
வீழ்ந்ததில் இருந்து
பூமித்தாய் மடியில்
புதையும் வரை...
பாலுடன் கலந்தூட்டிய
பாசாங்கில்லாப் பாசம்
அன்னையிடம் மட்டுமே
நித்தியமாய் என்றும்!!!

மடியினில் படுத்த
சிறு நொடி நேரம்
கண்ணீர் துடைத்த
அவள் கர வாஞ்சை
எல்லாமும் எனக்குள் தந்து
உன் துன்பம் மற என்றுணர்த்த
கொஞ்சமாய்த் தூங்கினேன்
அனைத்தும் மறந்து...

---கீர்த்தனா---

2 comments: