Friday 10 May 2013

பறக்க ஆரம்பிக்கையில் ..


இன்றுவரை ஆண்டவன்
தந்ததை விடவா
புதிதாய்ப் பெறப்
போகின்றேன்????
பறக்க ஆரம்பிக்கையில்
சிறகுகள் பறிக்கப் படுவது
ஒன்றும் புதிதல்லவே...
ஆனாலும் விழிகளும் நெஞ்சமும்
சிந்தனை அலுவலகமும்
சொல்லுக் கேட்பதில்லையே...
தம் கடமையை
எப்பொழுதும் மிகச்
சரியாகவே செய்கின்றன....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment