Friday 31 May 2013

உயிர் கொல்லி...

புல்லாங்குழலல்ல ஊதிவிட
இராகம் பிறக்க!!
ஊதுகின்றாய் அடுப்பாங் குழல்!!
நன்றாக ஊது ஊது...
தணலாகிப் பற்றி எரியப்போவது
உன் உயிர் சுமக்கும்
சுவாசத் தொழிலகம்...
புரிந்து கொள்ளும் நேரம்
பிரிந்து சென்று விடும்
உன்னுயிர் வெகு தூரம்!!!

---கீர்த்தனா---

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்... புகை பிடிப்பவர்களுக்கு அன்புடன் வேண்டுகோள்!! மீள முயற்சியுங்கள்... ஒரு பதிவில் படித்தேன் புகைக்க ஆசை எழும் நேரத்தில் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால், அதில் நிகொட்டினை எதிர்க்கும் சக்தி இருப்பதால்,புகைக்கும் விருப்பத்தை அது கட்டுப்படுத்துவதாக... விடுபட விரும்பும் அன்புள்ளங்கள் முயற்சி செய்து பாருங்கள்... அன்புடன் கீர்த்தனா...  

2 comments:

  1. அவரவர் உணர்ந்து திருந்த வேண்டும்...

    ReplyDelete
  2. aamaam thozhaa.. nammaal mudivathu penaavaal pesa maddume...

    ReplyDelete