Tuesday 4 June 2013

நெஞ்சச் சுமை

மலையொன்று பெரிதாக
தடையாகக் கண்முன்னே
கரம் கொண்டு நீ தூக்கு,
சஞ்சீவி மலை தன்னை
அநாயாசமாகத் தூக்கிய
ஆஞ்சநேயா!!! தாள் பற்றினாள்
தஞ்சம் நீ என உன்பக்தை...
திடம் கொண்ட புஜம் தூக்கி
இடர் யாவும் உன் தோளில்
மலையாகச் சுமந்து கொண்டு
இவள் நெஞ்சச் சுமை இறக்கு...
சுமக்கும் சக்தி இழந்து விட்டாள்...

---கீர்த்தனா---

2 comments: