Sunday 30 June 2013

வைர முத்துக்களாய்.....

குங்குமம் குழைத்துப் பூசி
பொன்முகம் சிவக்க மலர்ந்து
இன்முகச் செங்கதிரோன்
மிதந்து வரும் வழி நோக்கி...

செங்கமலச் செல்வியின்
சலிக்காத காத்திருப்பும்...
நீரோட்டத்தில் மிதந்து
மெதுவாய் அசைந்தாடும்
அவள் சிறு நளினமும்...

வட்டப் பச்சிலைத் தட்டில்
நீர்த்துளி ஒட்டாமல்...
வைர முத்துக்களாய் உருண்டோட
தானும் அசைந்து அவள் களிப்பில்
பங்கு கொள்ளும் இலையின் அழகும்...

பார்க்குந்தோறும் சலிக்காமல்
வியந்து வியந்து இரசிக்க
மானுடக் கண்களுக்கு
விருந்தாய்த் தந்தான் இறைவன்...

---கீர்த்தனா---

1 comment:

  1. அழகான அருமையான வரிகள் பரவசப்படுத்தியது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete