Wednesday 5 June 2013

மென்மையின் வன்போராட்டம்..

மருள்விழி மானின்
துள்ளலும் பாய்ச்சலும்
புற் தரை மேய்ச்சலும்
சுனை நீர் நீச்சலும்
சந்தோஷ கணங்களாய்
மென்மைக் குணத்துடன்!!

புலியின் விரட்டலில்
வாழ்வின் கணங்கள்
நொடி நொடியாய்
தோற்கையில்....
அத்தனை பலமும்
ஒன்றாய்த் திரட்டிய
கடைசி முயற்சியில்
மென்மை வன்மையாகி....
போராடும் திறன் பெற்று
வாழ்வு இல்லையெனின் சாவு..

---கீர்த்தனா---

2 comments:

  1. போராடும் திறனை பார்க்கும் போது வருத்தமாக இருக்கும்...

    ReplyDelete