Monday 17 June 2013

துகிலுரியும் துச்சாதனர்கள்...

துகிலுரியும்
துச்சாதனர்கள்
மரகதப் பட்டாடை
பறித்து இழுக்க!

காணச் சகிக்கா
மழை மேகம்
இறுகக் கண்கள் மூடி,
பொழியும் துளிகளையும்
தனக்குள் அடக்கி
எங்கோ சென்றுவிட!

கூனிக் குறுகிய
இயற்கை அன்னை
ஈர நெஞ்சங்களைத் தேடி
பட்டாடை வேண்டாம்
ஆடை கொடுங்கள் போதும்
எனும் மன்றாட்டுடன்
கதறி அழ!!

துரத்தும் வில்லன்களாய்
மரம் அழிப்போர்...
காப்பதற்கு துடிக்கும்
நல்லோரையும் மீறி....

---கீர்த்தனா---

மரங்களைக் காக்கும் பெரும் பணி புரியும் தம்பி சிதம்பரம் திருஞானம் அவர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்..

2 comments:

  1. அருமை...

    திரு சிதம்பரம் திருஞானம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete