Sunday 16 June 2013

அப்பா....

அன்னை சுமந்த பாரம்
கருவறை விடுத்து
மண்ணில் விழுந்த கணத்தில்
தன் நெஞ்சுள் ஏற்றும் ஜீவன்!
ஏற்றிய நிமிடம் முதல்
ஊற்றும் உதிரத்தில்
ஒளி விளக்கேற்றி
தன்னுயிர் வளர
தன்னலம் தொலைத்து
மெழுகாய் கரைந்து
மெதுவாய் உருகி
வாழ்வின் எல்லை வரை,
அத்தனையும் எமக்கீந்து
உழைப்பின் வலியை
நம் சிரிப்பில் மறக்கும் அப்பா....

----கீர்த்தனா----

அனைத்து தந்தையர்களுக்கும் என் அன்பான இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment