Friday 21 June 2013

நிலவு நிரந்தரம்..

வருந்தாதே நீயும்
நிலாமுற்றம் இல்லையெனினும்
நிலவு நிரந்தரம் என
சொன்னது நீ தானே??
கருமுகில்கள்
நிலவின் மாண்பை
நிரந்தரமாய் மறைத்தனவோ??
உலா வரும் நிலவின்
வரவிற்காய் ஏங்கி
விழி மேகத்துள்
இரண்டு கறுப்பு நிலாக்கள்
கலங்கிய ஓடைக்குள் மிதந்தபடி
இறவாத அன்பை எக்கணமும்
மறவாமல் சுமந்தபடி...

---கீர்த்தனா---

4 comments:

  1. /// விழி மேகத்துள்
    இரண்டு கறுப்பு நிலாக்கள்... ///

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Moon and the two eyes. So nice

    ReplyDelete