Monday 8 December 2014

பூஜைக்கான பூக்கள்...


பட்டாய் ஐந்திதழ்கள்
சிட்டொன்று அந்தரத்தில்
சுற்றுமுற்றும் பார்க்கவில்லை
சுதந்திரமாய் தேனருந்தியது...

கிணற்றடி மூலையிலே
பனிவிழுந்த செம்பருத்தியையும்
தேனருந்தும் சிறுசிட்டையும்
மதிமயங்கி இரசித்திருக்க
கிருஷ்ணன் கோவில் ஐயா வந்தார்
கிறுகிறுவெனப் பூக்களைக் கொய்தார்...

பூவுக்கு வலிக்குமோ
ஒரு கணம் வலித்தது
பூஜைக்கான பூக்கள் அல்லவா
ஏதும் சொல்லவில்லை...
கொய்யாப்பழம் கொந்தும்
கொய்யாமரக் கிளியை இரசிப்பதற்கு
மௌனமாய் நகர்ந்து சென்றேன்...

---கீர்த்தனா---