Wednesday 19 June 2013

வண்ணச் சோலையிலே

தும்பி பறந்த அவ்
வண்ணச் சோலை!
நுண்ணிய மனதிடை
அன்பு கொண்டு ஆறாக...

உண்மை அன்புடன்
கண்ணியம் கொண்ட
அன்பாளர் நிஜமாய்
யாரிங்கு தும்பியே?
பதில் சொல்லென
கணை விடுத்த கேள்விக்கு
என் சொல்வேன் தோழியே
தேடிப் பறக்கின்றேன்!
இன்று நீ நாளை யாரோ
எனும் அன்பாளர்களே
அதிகம் கண்டேன் என்றது!

நொந்த மனது வெந்த
காயங்களுடன் உயிர் கொடுத்த
அன்பு மீண்டும் கிட்டுமோ என
வெம்பி வெம்பி தேம்பி தேம்பி...
தும்பி பறந்த வண்ணச் சோலையிலே
நம்பியபடியே காத்திருப்பு....

----கீர்த்தனா---

2 comments:

  1. /// இன்று நீ நாளை யாரோ
    எனும் அன்பாளர்களே
    அதிகம் கண்டேன் என்றது...! ///

    அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. mikavum nandri..unmayil oruvaravathu ithalathai ookkuvippathil solla mudiyaatha makizhchi thozhar...

      Delete