Monday 24 June 2013

ஊழிக்கூத்து

ஊழித் தாண்டவம்
நானும் ஆடுவேன்
மனிதம் மறந்து
எனை நீ அழிக்கையில்!!!

உனக்காய்ப் படைத்தேன்
மரங்களும் செடிகளும்..
சுயநலம் கொண்டாய்...
பூண்டோடு அழித்தாய்!!
இயற்கையுடன் இயைந்து
வாழ மறுத்தாய்!!!

அறிவியல் கற்றும்
அறிவிழந்த மனிதா...
வினை ஒன்று இழைத்தால்
விளைவு ஒன்று உண்டென
அறியாயோ நீயும்....

நீ அடங்கும் வரை
நானும் ஆடுவேன்...
தொடர்ந்தும் தொடர்ந்தும்
ஊழித் தாண்டவம்!!!

இந்தக் கணம் முதல்
அழிப்பதை நிறுத்து!
பசுமையைச் சேர்த்து
செழிப்பதை காத்து...
இயற்கைத்தாய் எந்தன்
மனம் குளிர்வித்து!!!

---கீர்த்தனா---

2 comments: