Tuesday 2 July 2013

தாகம் கொண்ட தலையணைகள்..

நிச்சலமான இரவுகளில்
நிறைக்கும் நெஞ்சை
நினைவுகளின் கனங்கள்!
கனங்களின் தாக்குதலால்
விழியணை தாண்டும்
நீரோட்டப் பாய்ச்சலை...
தாகம் கொண்ட
தலையணைகள்...
வேகம் கொண்டு
உறிஞ்சிச் சுவைக்கும்...

---கீர்த்தனா---

2 comments: