Wednesday 31 July 2013

கனவுக் கதறல்கள்

நீண்ட வான் பரப்பின்
நீலக்கடல் விரிப்பில்
நிலவின் காலடியில்
நித்திலங்களாய்க் கொட்டி அங்கே
சிதறுகின்றேன் முற்றுமாய்...

ஆயிரம் ஆயிரமாய் ஒளிவீசும்
நட்சத்திரக் கண்கள் கொண்டு
நான்கு திக்கும் தேடித் தேடி
எங்கு சென்றாய் நீ என
பரந்த இருள் வெளியினிலே
கனவுக் கதறல்கள்
நாள் தோறும் தூக்கத்திலே...

---கீர்த்தனா---

2 comments:

  1. சிந்தனை வரிகள் அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete