Wednesday 17 July 2013

தீண்டும் தீண்டாமை...

தீண்டும் தீண்டாமை
வேண்டாம் கொடும் பாவம்!!
கண்டேன் இரு கண்ணில்
கழிவிரக்கப் பிறப்புரிமை!!
வேண்டிப் பிறக்கவில்லை
எந்த இனம் வேண்டுமென!!

நாடி நரம்புகளில்
செங்குருதி ஒன்றே சுழற்சி!!
உணர்வுப் புலன்கள்
மரத்துப் போகவில்லை
எங்கேயும் வலிகளின் சுமை!!

சாதியம் எரிக்கும்
அக்கினிக் குஞ்சுகள் எங்கே???
கொத்திக் குதறிச் சகமனிதர்
வலி சுவைக்கும் நரகாசுரரை
வதம் செய்ய....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment