Thursday 4 July 2013

சிறகடித்துப் பறந்து பறந்து..

தமிழ்த் தாயே
உன் குழந்தை நான்...
படைப்பின் வலுவிழந்தேன்
வார்த்தைகள் இன்றி!
அள்ளிக் கொடு அன்னாய்!!
அமுத மொழி கோர்க்க!

படைப்பின் தாகத்தில்
நா வறண்டாள் உன் பிள்ளை!
மொழியருவி என் வாயில்
தேனாகச் சுரக்க வைப்பாய்!

தாகந் தீரப் படைத்திடுவேன்
கவியின்பச் சுவை சேர்த்து...
கனவுலகின் கீதங்களும்..
கற்பனையின் வண்ணங்களும்...
சிறகடித்துப் பறந்து பறந்து...
எல்லையற்ற வான்வெளியில்....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment