Tuesday 30 July 2013

வலிகளின் அறுவடை

ஆணவத்தின் உச்சப்புள்ளியில்
ஆட்டுவிக்கும் முறைமை!!
ஆற்று வெள்ளமாய் கண்ணீர் பெருக்கி
ஆதங்கத்துடன் தொடரும் உறவுகள்!!

ஆதிக்கம் செலுத்துதல் தான்
ஆண்மைக்கு பெருமை என நம்பும்
ஆண்கள் சிலரின் மனப் போக்கில்
அடிபட்டுச் சிதையும் குடும்பக்கோவில்!!

ஆசைத் தாயின் கண்ணீர் பார்த்து
ஆறாத காயம் கொண்ட பிஞ்சு நெஞ்சங்களின் 

ஆழ்மனதில் புரையேறிக் கிடக்கும் வலிகளின் 
அறுவடையாய் கேள்விக்குறியாகும் 
எதிர்கால இலட்சியங்கள்!!

எந்த உரிமையில் மனம் சிதைக்கப்படுகிறது???
பாசத்தின் வலிமையின் தவறான பயன்படுத்தல்
தமை விட்டு நீங்க மாட்டார்கள் எனும்
நம்பிக்கையின் எதிரொலி!!
பாசத்திற்கு பரிசாக வன்முறை!!

(சிலரை மட்டுமே இங்கே குறிப்பிட்டேன்..ஆழமான அன்போடு, உணர்வுகள் மதிக்கும் நிறைய பாசமான ஆண்களை இங்கே குறிப்பிடவில்லை. கண்கூடாக கண்ட சில உண்மைகளின் உணர்வு வெளிப்பாடு மட்டுமே இந்த கவிதை. யாரையும் நோகடிக்கும் நோக்குடன் இல்லை--- அன்புடன் கீர்த்தனா--- ♥)

2 comments:

  1. சில இடங்களில் உண்மை தான்... மறுப்பதற்கில்லை...

    ReplyDelete