Tuesday 30 July 2013

மீண்டும் தனிமைக்கூட்டுக்குள்...

சுட்டு விரல் நீட்டி
அதோ பார் இதோ பார் என
இயற்கையின் ஒவ்வொரு துளியையும்
உயிர்நட்புடன் பகிர்ந்து ரசித்த கணங்களில்
அவளின் செல்லக் குழந்தையாய் நான்...
தாய்மையுடன் ரசித்து தலைகோதிய அவள்...

கண்களுக்குள் நிறைத்த
காட்சிகளின் களிப்பினிலே
கட்டி அணைத்து அணைத்து
கன்னத்தில் ஒற்றி வைத்தேன்
ஆனந்தத்தின் வெளிப்பாட்டினை...

முட்டிய துன்பம் மீண்டும் சூழ
நெஞ்சினுள் ஏதோ கனமாய் அழுத்த
கெட்டியாகப் பிடித்த கரங்களை விட்டு விலகி
மீண்டும் தனிமைக்கூட்டுக்குள்...

---கீர்த்தனா---

1 comment: