Friday 5 July 2013

கோரமுகம்!!!

பூவாய் மலரும் இரண்டு மனம்!
துளிர்த்து விடும் காதல் மலர்!
மனித உருவும் அருவ அன்பும்
காதலின் முழுத்தகுதியாய் வரித்து!

வானத்துப் பொன்வீதியில்
சிறகடிக்க எத்தனிக்கையில்!
சுற்றி வளைக்கும் சர்ப்பங்களாய்
சாதிமத விஷநாக்குகளின் தீண்டல்கள்!

"கேளடா மானிட ஜாதியில்
மேலோர் கீழோர் இல்லை"
ஏட்டினில் படித்த பாரதி கவிதை...
பட்டிமன்றம், நேர்காணல்,
அரட்டைச்சந்தி மட்டும் சிறக்க...

நெஞ்சை நிமிர்த்தி வாய்கிழியப் பேசும்
கொள்கை மறந்த கொள்கைப்பரப்பாளர்களின்
உண்மை முகத்துள் புதைந்து கிடப்பது
உயிர்ப்பலி வாங்கும் விலங்கின் கோரமுகம்
விதிவிலக்காய் சிலரைத் தவிர்த்து!!!

---கீர்த்தனா---

2 comments: