Tuesday 6 August 2013

ஒற்றைக் குயிற் பாட்டு....

நீண்ட பெரு வெளியில்
மிரட்டிச் சூழ்ந்த இருளில்...

அண்டசராசரமும்
இடிந்து விழுந்த உணர்வில்...

ஒவ்வொரு நிமிடத் துளிகளும்
பென்னம்பெரு நரகத் துளிகளாய்...

தனக்குள் அடக்கிய துன்பச்சுமைக்குள்
தன்னையே அடக்கம் செய்யும்
ஆதரவற்ற நிலையில்...

வாழ்வாதாரம் தேடும்
ஒற்றைக் குயிற் பாட்டாய்
உள்ளே எழும் கேவலின் சோக ராகம்
எங்கோ தூரமாய் யாருக்கும் கேட்காமலே...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment