Friday 16 August 2013

மொழியிழந்தோம்


உயிர்த்தமிழ் அமுதாய்
உறவாடிய நாவில்...
அலுப்போடு உறவாடும்
அந்நிய மொழியின் தேவை!

உபயோகம் இன்றி
உள்ளே அடங்கிய அமுதம்!
வருடக்கணக்கில்
ஆழ்மனதின் வேதனையாய்
உணர்வுடன் உறைந்து போய்!

வெம்பியழும் மனது
தமிழன்னையிடம்
மன்னிப்புக் கோரி
ஒவ்வொரு கணங்களும்!

இலக்கணமும் இலக்கியமும்
மங்கிய புகை ஒளியாய்
முழுமை அற்று மறதியின் பிடியில்...

நாளை என் வம்சம்
அன்னை மொழி மறந்த நாவுடன்
புலம் பெயர் நாட்டில்!

நக்கினார் நாவிழந்தார் அன்று!
நக்கினோம் மொழியிழந்தோம் இன்று!
உறைக்கும் உண்மை இருப்பினும்
சுரணையற்று தொடருகின்றோம்...
தொடர்ந்தும் தொடர்ந்தும்...
நாடிழந்து அகதிகளானதால்....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment