Tuesday 20 August 2013

இரு நிலவுகள்!!

வெண்ணையாய் திரண்ட கன்னம்
வெண்மையாய் மின்ன மின்ன!!
அண்ணாந்து பார்த்தான் என் மகன்
அண்ட வெளியை நோக்கி...
சின்னஞ்சிறு மலர்க்கை தூக்கி
மேலே சுட்டிக் காட்டி!!

அண்ணாந்து பார்த்தேன் நானுமங்கே
வெண்ணை திரண்டு பந்தாய் உருண்டு
வெண்ணிலவு ஒளிவீசித்
தண்மையாய் ஊர்ந்தது!!
கண்களை நிரப்பின இரண்டு நிலவுகள்!!
ரசித்தேன் ரசித்தேன் சுற்றும் மறந்து...
என் தளிர் நிலவவனையும்
வெண் குளிர் 
நிலவினையும்!!!

---கீர்த்தனா---

1 comment:

  1. ரசித்தேன் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete