
வாடகையில்லா வான்வெளியில்
சுகமாக மிதந்து மிதந்து
பறந்தது பறந்து களைத்தபின்னே!
நீளப்பரப்பிய மேகக்கட்டிலில்
வெண்பஞ்சு மெத்தைக்குள்
பொன்பஞ்சு உடல்புதைத்து
வெண்மதித் தண்மையில்
மென்குளிர் தழுவிடவே!
பொன்னெழில் செங்கதிரோன்
சுட்டெழுப்பும் கணம் வரையில்
வாழ்வின் அவலங்கள் மறந்து
வானத்து வண்ணப் பறவையாய்
நட்சத்திரப் பூக்குவியல் மத்தியில்
மெய்மறந்த ஆழ் உறக்கம்...
---கீர்த்தனா---
No comments:
Post a Comment